Wednesday, July 25, 2012

32 ஆம் திருமுறை மாநாடு

32 ஆம் திருமுறை மாநாடு 

27 சூலை 2012 முதல்  29 சூலை 2012 வரை
அருள்மிகு தெண்டாயுதபாணி திருக்கோவில் 
டேங் சாலை , சிங்கப்பூர் 

அன்புள்ள சிவநேயச் செல்வர்களே,

பன்னிரு திருமுறைகள் வழியே சைவ சமயத்தின் சிறப்பு , பெருமை, நெறிமுறைகள் , இவைபற்றி அனைவரும் நன்கு தெளிவாக அறிந்து சொள்ளுதல், திருமுறைகளை ஓதிப் பயன் பெறுதல் ஆகிய நோக்கங்களுடன் முப்பத்திரண்டாம் திருமுறை மாநாடு 2012 ஆம் ஆண்டு சூலை மாதம் 27 ஆம் நாள் முதல் 29 ஆம் நாள் வரை (வெள்ளிக்கிழமை , காரிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) மூன்று நாட்களிலும் சிங்கப்பூர் டேங் சாலை , அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்திலுள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது, மாநாட்டின் ஒரு அங்கமான அறுபத்து மூவர் குரு பூசை விழா மட்டும் டெப்போ சாலையிலுள்ள அருள்மிகு ருத்திர காளியம்மன் ஆலயத் திருமண மணடபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 முதல் பிற்ப்பகல் 1.00 மணிவரை நடைபெறும் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக ஜோடார்ன் நாட்டிற்கான , உறைவிடம் கொள்ளாத, சிங்கப்பூர் அரசத் தூதர் திரு, கே.கேசவபாணி அவர்கள் பங்கேற்கிறார்கள், தமிழ்நாட்டின் பவானியிலிருந்து வரும் சிவத்திரு.அ . தியாகராசன் அவர்கள் மாநாட்டுச் சிறப்புச் சொற்ப்பொழிவுகளை  வழங்குகிறார்கள்.

உங்கள் குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, எல்லாம் வல்ல சிவபெருமான் அருளைப் பெறுங்கள் என்று பணிவன்போடு வேண்டிக் கொள்கிறோம்.

திருமுறை மாநாட்டு எற்பாட்டுக் குழுவினர் 

நிகழ்ச்சி நிரல் 
தமிழ் : http://singaithirumurai.org/TM32-Invitation-Tamil.pdf
ஆங்கிலம் : http://singaithirumurai.org/TM32-Invitation-English.pdf 
 

Site Info

My Blog List

Followers